Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Saturday, January 1, 2011

PRESS MEET BY DHARMANANDA (LENIN) ON DEC 31st

சிடி'யில் இருப்பது நானல்ல: ரஞ்சிதா பேட்டி



""சாமியார் நித்யானந்தாவுடன் தொடர்பு இருப்பதாக வெளியான "சிடி' பொய்யானது. அதிலிருப்பது நான் அல்ல,'' என்று நடிகை ரஞ்சிதா தெரிவித்துள்ளார்.

சாமியார் நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா "சிடி' விவகாரம் வெளியான பிறகு, முதன் முறையாக நடிகை ரஞ்சிதா, பெங்களூரில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். பேட்டியின் போது, அவர் பதட்டத்துடனும், உருக்கமாகவும் கூறியதாவது: என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அந்த நேரத்தில், எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவாகவும், தைரியமாகவும் இருந்தனர். இவ்விஷயத்தில் நான் தைரியமாக செயல்பட்டேன். நான் தவறு செய்யவில்லை. அதனால் நான் பயப்படவில்லை. "சிடி' வெளியான மறுநாள், நான் அமெரிக்கா சென்று விட்டேன். எனது உயிருக்கு பாதுகாப்பில்லை. எனவே, பாதுகாப்பு கருதி அமெரிக்கா சென்றேன். அங்கிருந்து, ஜூன் 14ம் தேதி, இந்தியா திரும்பினேன். வெளியிடப்பட்ட "சிடி'க்கு எதிராக, நான் மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது, என்று மிரட்டப்பட்டேன்.

"சிடி' வெளியான போது, நான் பெரும் அதிர்ச்சியடைந்தேன். அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர எனக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. எனவே, எட்டு மாதம் கழித்து மீடியாக்கள் முன்பு தோன்றுகிறேன். என் மீது குற்றம் சாட்டிய லெனின் கருப்பனுக்கு எதிராக, பிடதி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளேன். நித்யானந்தா ஆசிரமத்தில் தியானம், யோகா பயின்றது உண்மை. சாமியாரின் லட்சக்கணக்கான பக்தைகளில் நானும் ஒரு நபர். "சிடி' வெளியானதிலிருந்து நான் இதுவரை நித்யானந்தாவை சந்திக்கவில்லை. பிடதி ஆசிரமம் என்னை அனுமதித்து, நித்யானந்தாவும் என்னை பார்க்க விரும்பினால் சென்று பார்ப்பேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. அதற்காக வெட்கப்படவில்லை. "சிடி'யில் வெளியானது நான் அல்ல. என்னை போன்ற ஒரு நபர். போரன்சிக் சோதனை முடிவை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். நித்யானந்தாவை விரும்பாதவர்கள் அவருக்கு எதிராக நின்று போராட வேண்டும். அதை விடுத்து, ஒரு பெண்ணின் முந்தானையில் பதுங்கிக் கொள்ளக் கூடாது. நித்யானந்தாவையும், என்னையும் சேர்த்து தயாரித்த காட்சிகள் போலியானவை. எனக்கு அரசியல் பின்னணி இல்லை. எனது தந்தை முதல்வரும் இல்லை. சக்தி வாய்ந்த "அவர்களுடன்' என்னால் போராட முடியாது.

சக்தி வாய்ந்தவர்கள் யார் என்று வெளியிட வேண்டுமென்றால் எனக்கும், எனது குடும்பத்துக்கும் 100 சதவீத பாதுகாப்பு தேவை. தமிழகத்தில் வாழும் எனக்கு, அங்குள்ளவர்கள் பாதுகாப்பு அளித்தால் பின்னணியை வெளியிட தயார். நான் தனிப்பட்ட பெண். 18 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வருகிறேன். சமூக சேவைகளும் செய்து வருகிறேன். இச்சம்பவத்தால் எனக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. வருத்தமும் இல்லை. மீடியாக்கள் ஒருதலைப்பட்சமாக இவ்விஷயத்தில் செயல்பட்டன. நான் தலைமறைவாக உள்ளதாகவும், தவறு செய்தது போன்றும் பூதாகரமான தோற்றத்தை மீடியாக்கள் உருவாக்கி விட்டன.

உங்கள் குடும்பத்தில் இது போன்று நடந்திருந்தால், இது போன்று வெளியிடுவீர்களா? இவ்வளவு நாட்கள், நான் மீடியா முன்பு தோன்றாதது தவறு என்பதை உணருகிறேன். எனக்கும் உயிர் வாழ்வதற்கு ஆசை இருக்குமல்லவா? எனது சோதனையான காலகட்டத்தில் எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நான் மனமார்ந்த நன்றி செலுத்துகிறேன். பிடதி போலீசார் என்னை தேடவில்லை. "சிடி' வெளியானவுடன் எனது வக்கீல் மூலமாக, எனது தரப்பிலான நியாயத்தை தெரியப்படுத்தினேன். ராம்நகர் கோர்ட்டில், லெனின் கருப்பன் மீது புகார் செய்துள்ளேன். ஆசிரமத்தில் நடக்கும் சம்பவங்களை வெளியில் யாரிடமும் வெளிப்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையுடன் பத்திரங்களில் கையெழுத்து வாங்கப்படுவது பற்றி எனக்கு தெரியாது. மற்றவர்களை பற்றி நான் கூற விரும்பவில்லை. ஆசிரம பத்திரத்தில் நான் கையெழுத்திடவில்லை.

தற்போதும் திரைப்படங்களில் நடிப்பதற்கு அழைப்பு வரத்தான் செய்கிறது. நான் பிடதி ஆசிரமம் செல்வதற்கு எனது கணவரும், எனது குடும்பத்தினரும் எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை. அவர்களும் என்னுடன் ஆசிரமத்துக்கு வருவர். வீட்டை விட்டால் கோவிலுக்கு செல்வது மட்டும் தான் எனது வழக்கம். ஆசிரமத்தில் நான் தங்குவது வழக்கமில்லை. எனவே அங்கு நடக்கும் எந்த சம்பவமும் எனக்கு தெரியாது. இவ்வாறு ரஞ்சிதா கூறினார்.

* நடிகை ரஞ்சிதா பேட்டியளிப்பதற்கு முன்பு அவர் சம்பந்தமான குறிப்புகள் திரையில் வெளியிடப்பட்டன.

* பேட்டி முழுவதும் ஆங்கிலத்திலேயே தெரிவித்தார். பல கேள்விகளுக்கு பதிலளிக்கையில் பதட்டமாக காணப்பட்டார்.

* சில கேள்விகளுக்கு மவுனமாக இருந்த பின்னர் பதிலளித்தார்.

* இருமுறை கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

* 45 நிமிடம் பேட்டி அளித்தார்.

குற்றச்சாட்டை சட்டரீதியாக சந்திப்பேன்:லெனின் கருப்பன் பேட்டி

 ""நடிகை ரஞ்சிதா பெங்களூரில் என் மீது கொடுத்துள்ள புகார் குறித்து சட்டப்படி எதிர்கொள்வேன்,'' என்று நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் கூறினார்.

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் லெனின் கருப்பன் கூறியதாவது: நித்யானந்தா - ரஞ்சிதா அடங்கிய வீடியோ, "சிடி' உண்மையானது தான் என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நித்யானந்தா தவறை என்னிடம் ஒப்புக்கொண்ட ஆதாரப்பூர்வமான ஆடியோ "சிடி' என்னிடம் இருக்கிறது. நித்யானந்தா பெண் சீடர்களிடம் "செக்ஸ்' சம்பந்தமாக செய்து கொண்ட ஒப்பந்தமும் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என் மீது, நித்யானந்தாவின் உதவியாளர் சுப்ரியா மூலமாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நடிகை ரஞ்சிதா மூலமாகவும் தற்போது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கற்பழிப்பு முயற்சி மற்றும் புண்படும் வார்த்தைகளால் திட்டியதாகவும் என் மீது ரஞ்சிதா, போலீசில் புகார் கொடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதை நான் சட்டபூர்வமாக எதிர்கொள்வேன்.

ரஞ்சிதா முதன் முதலில் நித்யானந்தாவை சந்தித்தது, ஆசிரம நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது, கடைசியில் வீடியோவில் சிக்கியது வரை நடந்த எல்லா விவரமும் எனக்கு தெரியும். பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோவை நான் எடுக்கவில்லை. இன்னொருவர் எடுத்து, என் மூலம் வெளிவந்தது. கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று நித்யானந்தாவின் சீடர்களிடம் நான் பேசிக்கொண்டிருந்த போது, "டைட்டானிக்' கப்பல் போல ஆசிரமம் ஆகப்போகிறது என்று சொன்னேன்.

இதை ஒரு சீடர், நித்யானந்தாவிடம் சொல்லிவிட, அவர் என்னிடம் "டைட்டானிக்' குறித்து நான்கு மணி நேரம் விசாரித்தார். ஏன் "டைட்டானிக்' கதையை நீ குறிப்பிட்டாய் என்றும் கேட்டார். நான் ஏதேதோ பொய் சொல்லி சமாளிக்க பார்த்தேன், முடியவில்லை. என் மீது அவர் பலத்த சந்தேகப்படுவது தெரிந்தது. சேலத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது பாதி வழியில் பக்தர்களின் கூட்டத்தில் புகுந்து தப்பித்து விட்டேன். நித்யானந்தா உண்மையானவர் என்றால், உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதிக்க வேண்டும். இவ்வாறு லெனின் கருப்பன் கூறினார்.

Source: Dinamalar

No comments:

Post a Comment