Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Monday, October 22, 2012

Nithyanantha has rushed to Bidadi ashram to avoid arrest in Tamil Nadu

திருவண்ணாமலை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கொடுத்துள்ள போலீஸ் புகாரின் பேரில் தான் கைது செய்யப்படலாம் என்று அஞ்சும் நித்தியானந்தா, தமிழகத்தை விட்டே போய் விட்டார். அவர் தற்போது கர்நாடக மாநிலம் பிடதி ஆசிரமத்திற்குப் போயிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக அருணகிரிநாதரால் பட்டம் சூட்டப்பட்ட நித்தியானந்தா, அதே அருணகிரிநாதரால் நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் மதுரை ஆதீன மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், மதுரை ஆதீனம் சார்பில் விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், நித்தியானந்தாவை நீக்கியிருப்பதால், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியிருந்தார்.
இதையடுத்து அந்தப் புகாரின் பேரில் நித்தியானந்தாவை தூக்கி உள்ளே போட காவல்துறையினர் தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதை உணர்ந்த நித்தியானந்தா, தனது திருவண்ணாமலை மடத்தை விட்டு வெளியேறி விட்டாராம்.
அவர் தற்போது பிடதி ஆசிரமத்திற்குப் போய் விட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து திருவண்ணாமலை மடத்தின் நிர்வாகிகள் சிலர் கூறுகையில், சுவாமி தலைமறைவாகவில்லை. ஆதீனப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு திருவண்ணாமலையில் அவருக்கு சில நெருக்கடிகள் ஏற்பட்டன. இதைத் தவிர்க்க அவர் தனது சீடர்களுடன் பிடதி ஆஸ்ரமத்துக்கு சனிக்கிழமை மாலை புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் அவர் பங்கேற்கிறார். இத்துடன், அங்கு இம் மாதம் 28-ம் தேதி வரை நித்யானந்தாவே தியானப் பயற்சி நடத்துகிறார். திருவண்ணாமலைக்கு அவர் எப்போது வருவார் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றனர்.
ஆனால் இப்போதைக்கு அவர் தமிழ்நாட்டுப் பக்கம் வருவதற்கான வாய்ப்பில்லை என்கிறார்கள். ஏற்கனவே பிடதி ஆசிரமத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு தமிழகத்திற்கு வந்தார் நித்தியானந்தா. தற்போது மறுபடியும் அதே பிடதிக்குப் போயுள்ளார். ஏற்கனவே கர்நாடகத்திலும் அவருக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் இருப்பது நினைவிருக்கலாம்.

 Nithyanantha has rushed to Bidadi ashram to avoid arrest in Tamil Nadu after Madurai Aadheenam Arunagirinathar given a complaint against him in Madurai police station.

 http://tamil.oneindia.in/news/2012/10/22/tamilnadu-nithyanantha-rushes-bidadi-ashram-163519.html
 ----------------------------------------------------------------------------------
 தலைமறைவான நித்யானந்தா, பிடதி ஆசிரமத்தில் தஞ்சம்

 திங்கட்கிழமை, அக்டோபர் 22, 9:41 AM IST

சென்னை, அக்.22-
 மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆதீனத்தின் சொத்துக்களை காப்பாற்ற ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. ஆதீன சொத்துக்களை மீட்கவும், மடத்தை அரசே எடுத்துக் கொள்ளவும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை நீக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையும் மதுரை சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நித்யானந்தா நீக்கப்படுவதாக மதுரை ஆதீனம் அறிவித்தார். மேலும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மதுரை ஆதீனம் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து மடத்தில் இருந்த நித்யானந்தா சீடர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
மதுரை ஆதீனம் கொடுத்த புகாரின் பேரில் நித்யானந்தா கைது செய்யப்படலாம் என்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் இருந்த நித்யானந்தா தலைமறைவானார். ஆனால் அவர் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றி திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகள் கூறியதாவது:-
நித்யானந்தா தலைமறைவாகவில்லை. ஆதீன பொறுப்பில் இருந்து நித்யானந்தா நீக்கப்பட்ட பிறகு திருவண்ணாமலையில் அவருக்கு சில நெருக்கடி ஏற்பட்டது. இதை தவிர்க்க தனது சீடர்களுடன் அவர் பிடதி ஆஸ்ரமத்துக்கு சென்றுள்ளார்.
 
 http://www.maalaimalar.com/2012/10/22094159/nithyananda-refuge-in-the-bida.html

-----------------------------------------------------------------------------------

திருவண்ணாமலையில் இருந்து

நித்யானந்தா தப்பியோட்டம்

 10/22/2012 6:36:18 AM

 திருவண்ணாமலை:மதுரை ஆதீனம் போலீசில் கொடுத்துள்ள புகாரின்பேரில் கைது செய்யப்படலாம் என்ற பயத்தால், திருவண்ணாமலை ஆசிரமத்தில் தங்கியிருந்த நித்யானந்தா இரவோடு இரவாக தலைமறைவாகி விட்டார். பெங்களூர் பிடதி ஆசிரமத்துக்கு சென்றிருப்பதாக அவரது சீடர்கள் தெரிவித்தனர்.மதுரை ஆதீனத்தின் 293வது இளைய மடாதிபதியாக நித்யானந்தாவை கடந்த ஏப்ரலில் ஆதீனம் அருணகிரிநாதர் நியமித் தார். அதற்கு, பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கண்டன போராட்டங்களும் நடந்தன. நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக நியமித்தது செல்லாது, அவர் தகுதியற்றவர் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. மேலும், மதுரை ஆதீன மடத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டது.அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்களால் நிலைகுலைந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், அதிரடியாக இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்யானந்தாவை டிஸ்மிஸ் செய் தார். மேலும், நித்யானந்தாவால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம், அவர் தொலைபேசியில் என்னை மிரட்டுகிறார், அவரது சீடர்கள் அடியாட்கள் போல இருக்கின்றனர் என மதுரை போலீஸ் கமிஷனரிடம் ஆதீனம் அருணகிரிநாதர் புகார் செய்துள்ளார்.

அதனால், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த நித்யானந்தா அதிர்ச்சியும், பீதியும் அடைந்தார். ஆசிரமத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. முக்கிய சீடர்கள், மதுரை ஆதீனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சீடர்கள் மற்றும் வக்கீல்களுடன் ரகசிய ஆலோசனையில் நித்யானந்தா ஈடுபட்டார்.
மதுரை ஆதீனம் கொடுத்துள்ள புகாரின் பேரில், கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என நித்யானந்தாவிடம் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கொலை மிரட்டல் என நேரடியாக புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாலும், தமிழக அரசு சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அருகதையற்றவர் என கடுமையாக கருத்து தெரிவித்து இருப்பதாலும் கைதானால் ஜாமீன் பெறுவது மிகவும் சிரமம் என நித்யானந்தாவுக்கு விளக்கியுள்ளனர்.இந்த குழப்பமான நிலையில், ஆசிரமத்தில் யாரையும் சந்திப்பதை தவிர்த்து வந்த நித்யானந்தா, நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் திருவண்ணாமலையில் உள்ள அவரது ஆசிரமத்தில் இருந்து திடீரென தலைமறைவாகிவிட்டார். அவருடன், மதுரை ஆதீனத்தில் தங்கியிருந்த சீடர்களும் தலைமறைவாகி விட்டனர். அவரது உதவியா ளர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து, ஆசிரமத்தில் தற்போதுள்ள சீடர்கள் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள பிடதி ஆசிரமத்துக்கு நித்யானந்தா சென்றிருப்பதாக தெரிவித்தனர்.

 http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=28757

No comments:

Post a Comment