Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Wednesday, January 7, 2015

நித்யானந்தா ஆசிரம பெண் உடல் இன்று தோண்டி எடுத்து மீண்டும் பரிசோதனை

நித்தியானந்த ஆசிரமத்தில் மர்மமாக இறந்த பெண்ணின் சடலம் மறு பிரேத பரிசோதனைக்காக இன்று தோண்டியெடுப்பு


First Published : 07 January 2015 08:46 AM IST
பெங்களூரில் நித்யானந்தா ஆசிரமத்தில் இறந்த திருச்சி பெண்ணின் உடல் மறு பிரேத பரிசோதனைக்காக இன்று(புதன்கிழமை)தோண்டியெடுக்கப்படுகிறது.
திருச்சி நவலூர் குட்டபட்டு மேலத்தெருவைச் சேர்ந்தவர் அர்ஜுனன்-ஜான்சிராணி. இவர்களது மகள் சங்கீதா (24). கடந்த 4 ஆண்டுகளாக பெங்களுரு நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கி பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி ஆசிரமத்தில் இருந்து சங்கீதாவின் தாய் ஜான்சிராணிக்கு நித்தியானந்த ஆசிரமத்திலிருந்து அழைப்பு வந்தது. அப்போது சங்கீதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் உடனே பெங்களூரு வரவும் என்று கூறியுள்ளனர்.

நித்யானந்தா ஆசிரம பெண் உடல் இன்று தோண்டி எடுத்து மீண்டும் பரிசோதனை
இதையடுத்து சங்கீதாவின் பெற்றோர் பெங்களூரு புறப்பட்டுச் சென்றனர். ஓசூர் அருகே அவர்கள் சென்ற போது காரை நிறுத்திய ஆசிரமவாசிகளான பிரானாந்தா மகராஜ் மற்றும் சிலர் சங்கீதாவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். அதன்பின் அவரது உடல் அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 1-ம் தேதி சங்கீதாவின் பெற்றோர் திருச்சி ராம்ஜிநகர் காவல்நிலையத்தில் சங்கீதாவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி புகார் அளித்தனர். ஆனால் போலீஸôர், நடந்த சம்பவம் பெங்களூரில் நடந்திருப்பதால் புகாரை வாங்க மறுத்து திருப்பி அனுப்பினர்.
பின்னர் பெங்களூரு சென்ற அர்ஜுனன் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் செவ்வாய்க்கிழமை காலை திருச்சி வந்த பெங்களூரு போலீஸôர்,சங்கீதாவின் சடலத்தை தோண்டி மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்வது குறித்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி,திருச்சி கோட்டாட்சியர்,ராம்ஜிநகர் போலீஸôர் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனையில் புதன்கிழமை காலை நவலூர் குட்டப்பட்டில் புதைக்கப்பட்ட சங்கீதாவின் சடலத்தை திருச்சிஅரசு மருத்துவர்கள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இன்று காலை சங்கீதாவின் சடலம் மீண்டும் பிரேதம் பரிசோதனை செய்யப்படுகிறது.  தோண்டி எடுக்கப்படுகிறது
http://www.dinamalar.com/news_detail.asp?id=1155195

http://www.tamilmithran.com/
http://www.maalaimalar.com/2015/01/07092107/nithyananda-ashram-woman-dead.html
-----------------------------------------------------------------------------------------------------------------------

நித்யானந்தா ஆசிரம பெண் உடல் இன்று தோண்டி எடுத்து மீண்டும் பரிசோதனை

திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அருகே நவலூர் குட்டப்பட்டு பகுதியை சேர்ந்த அர்ச்சுனனின் மகள் சங்கீதா (வயது 24). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கு தங்கி இருந்த சங்கீதாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் இறந்து விட்டதாகவும் நவலூர் குட்டப்பட்டில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து சங்கீதாவின் பெற்றோர் பெங்களூர் விரைந்து சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்த பின் மகளின் உடலை பெற்று திருச்சிக்கு கொண்டு வந்து அடக்கம் செய்தனர். இந்த நிலையில் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக ராம்ஜிநகர் போலீஸ் நிலையத்தில் சங்கீதாவின் தாய் ஜான்சிராணி புகார் செய்தார். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்தனர். மேலும் சம்பவம் நடந்த இடம் பெங்களூரு என்பதால் அங்கு சென்று புகார் அளிக்க கூறினர். 

இதைதொடர்ந்து கர்நாடக மாநிலம் ராமநகர் டவுனில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கடந்த 3-ந் தேதி ஜான்சிராணி சென்றார். அங்கு போலீஸ் சூப்பிரண்டு சந்திரகுப்தாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் நித்யானந்தா சாமியார் மடத்தில் தங்கியிருந்த தனது மகள் சங்கீதா டிசம்பர் மாதம் 28-ந் தேதி இறந்ததாகவும், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், மறு பிரேத பரிசோதனை செய்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து கர்நாடக மாநிலம் ராமநகர் பிடுவி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் நேற்று திருச்சி வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து சங்கீதாவின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்வது குறித்த தகவல் தெரிவித்தனர். 

அதன்பின் நவலூர் குட்டப்பட்டு சென்று சங்கீதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கர்நாடக மாநில போலீசார் விசாரணை நடத்தினர். நவலூர் குட்டப்பட்டுவில் சங்கீதா உடல் புதைக்கப்பட்டு 5 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அவரது உடல் மிகவும் அழுகி இருக்கும். 

இதனால் இன்று (புதன்கிழமை) அதிகாலை சங்கீதாவின் உடலை தோண்டி எடுத்து அதே இடத்தில் மீண்டும் பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக மருத்துவ குழுவினர் இன்று காலை நவலூர் குட்டப்பட்டு செல்கின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சங்கீதா எப்படி இறந்தார்? என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment